புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா பிரசவத்தின் காரணமாக ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகினார். அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள ஆல்யா தனது இரண்டு குழந்தைகளுடனும் ஜாலியாக நாட்களை கழித்து வருகிறார். இதற்கிடையில் பலரும் ஆல்யா மீண்டும் சீரியலில் நடிப்பரா? எப்போது சின்னத்திரையில் வருவார்? என அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். முன்னதாக இதற்கு பதிலளித்த ஆல்யா, தான் இப்போது குழந்தை வளர்ப்பதில் ஜாலியாக இருப்பதாகவும் விரைவில் பிட்னஸ் மற்றும் இதர விஷயங்களை சரிசெய்து நடிக்க வருவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ரசிகர் ஒருவர் 'நீங்கள் எந்த சேனலில் நடிக்கப்போகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதில் கூறும் ஆல்யா, 'நான் நான்கு கதைகளை கேட்டிருக்கிறேன். அதில் இரண்டு பிடித்திருக்கிறது. எந்த சேனல் என்பது சில நாட்களில் தெரிந்துவிடும். கண்டிப்பாக நீங்கள் சந்தோஷப்படும் சேனலில் தான் நடிப்பேன்' என்று கூறியுள்ளார். மேலும், இன்னும் இரண்டே மாதங்களில் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேன் என்றும் கூறி உள்ளார். ஆல்யா மானசாவை மீண்டும் திரையில் பார்க்க போவதால் மகிழ்ச்சியடைந்துள்ள ரசிகர்கள் இப்போதே அவரது ரீ- என்ட்ரியை கொண்டாடி வருகின்றனர்.