துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஜய் டிவியில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி வரும் சீரியல் 'ராஜா ராணி -2'. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் அசத்தி வருபவர் நடிகை அர்ச்சனா. விஜய் டெலிவிஷன் விருது நிகழ்ச்சியிலும் கூட சிறந்த வில்லி நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். இந்த தொடரின் கதாநாயகி ஆல்யா மானசா பிரசவத்திற்காக சீரியலை விட்டு விலகிய பின்னரும் கூட, அர்ச்சனாவின் நடிப்பிற்காகவே இளைஞர்கள் பலரும் தொடரின் ரசிகர்களாக இருந்து வந்தனர். சில தினங்களுக்கு முன் அர்ச்சனா 'ராஜா ராணி-2' சீரியலை விட்டு விலகுவதாக தகவல் வெளியானது. ஆனால், அதன்பிறகும் அவர் நடித்த எபிசோடுகள் தொடர்ந்து சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்ததால் அவர் விலகவில்லை என ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
ஆனால், தற்போது அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும் விரைவில் புதிய புராஜெக்ட்டில் சந்திக்கிறேன் என்றும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர். அதேசமயம் 'ராஜா ராணி-2' தொடரின் வில்லி கதாபாத்திரத்தில் இனி அர்ச்சனாவுக்கு பதிலாக அர்ச்சனா குமார் நடிக்க உள்ளார். அர்ச்சனா குமார் 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' என்கிற நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர். 'பொன் மகள் வந்தாள்' தொடரின் மூலம் சின்னத்திரையில் நடிகையாகவும் அறிமுகமாகி நடித்து வருகிறார். பழைய அர்ச்சனாவின் இடத்தை புது அர்ச்சனா நிரப்புவரா என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.