மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என கலக்கும் நிகழ்ச்சி 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை'. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரசிகர்களின் பேவரைட் ஷோவான இது, தற்போது 4வது சீசனை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தீபன், பரீனா, மதன், ரேகா கிருஷ்ணப்பா மற்றும் சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணா உட்பட 10 சின்னத்திரை பிரபலங்கள் தங்கள் இணையருடன் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியில், சமீபத்தில் திருமணமாகி போட்டியில் கலந்து கொண்டுள்ள அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடிக்கு ஏரளாமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் டைட்டில் பட்டம் வெல்ல வேண்டும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற எலிமினேஷன் ரவுண்டில் தனிபட்ட சில காரணங்களால் அஜய் கிருஷ்ணா - ஜெஸ்ஸி ஜோடி பங்கேற்க முடியவில்லை. இதனையடுத்து இருவரும் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக ரசிகர்கள் பெரிய ஏமாற்றம் அடைந்துள்ளனர்.