பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நட்சத்திர நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வென்றார்கள். தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இறுதி சுற்றுக்கு அம்மு அபிராமி, ஸ்ருதிகா, தர்ஷன், வித்யுலேகா ஆகியோர் முன்னேறி உள்ளனர். இந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்ட் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் சந்தோஷ் பிரதாப் மற்றும் கிரேஸ் கருணாஸ் ஆகியோர் இறுதி சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் குக் வித் கோமாளியின் படப்பிடிப்புகள் கடந்த 15ம் தேதி நிறைவடைந்து விட்டது. இதனை இந்நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வரும் சிவாங்கி தெரிவித்துள்ளார். டைட்டில் வென்றது யார் என்பது வருகிற எபிசோட்களில் தெரியவரும். இதன் 4வது சீசனுக்கு சேனல் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.