இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வந்த அர்ச்சனா, பிக்பாஸ் நிகச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார். அதோடு, வைகை எக்ஸ்பிரஸ், ஆடை, டாக்டர் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார் அர்ச்சனா. அப்போது அவரது மகள் சாரா அவருக்கு ஒரு கடிதம் மற்றும் பிறந்தநாள் பரிசு கொடுத்துள்ளார். அந்த கடிதத்தை படித்து பார்த்த அர்ச்சனை உணர்ச்சி பெருக்கால் கதறி அழுதுள்ளார். அதுகுறித்து வீடியோ ஒன்றை அவர் பதிவிட்டு இருக்கிறார். அதோடு, அந்த கடிதத்தில் தனது மகள் சாரா தன்னுடைய பெருமை குறித்து ஏழு பக்கங்கள் எழுதி இருப்பதாகவும், அந்த கடிதத்தை படித்ததும் தான் ஆனந்த கண்ணீர் விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா.