இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல பெண் கானா பாடகரான இசைவாணி சின்னத்திரையின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரபலமானார். பிபிசி சாதனை பெண்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தாலும், அவரை பற்றிய தனிப்பட்ட விவகாரங்கள் எதுவும் முதலில் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் தான் இசைவாணியை பலரும் அறிவர். இசைவாணிக்கு முதலில் திருமணம் ஆகியிருந்த நிலையில், அவர் தனது கணவரை சில மாதங்களுக்கு முன் விவகாரத்து செய்திருந்தார். இசைவாணி தனது விவகாரத்து குறித்து பிக்பாஸில் பாவ்னி ரெட்டியிடம் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர்கள் பிரிந்ததற்கான காரணம் ரசிகர்கள் பலருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்நிலையில், இசைவாணி அளித்துள்ள பேட்டியில் தனது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதில், 'கானா பாடல் பாட என் வீட்டில் எனக்கு இருந்த ஆதரவு என் கணவர் வீட்டில் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தான் என் கணவரை விவாகரத்து செய்தேன்' என்று கூறியுள்ளார்.