வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
நடிகை வனிதா விஜயக்குமார் தனது கேரியரின் இரண்டாவது இன்னிங்சை அருமையாக ஆடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நல்ல மெச்யூர்டாக மாறியுள்ள வனிதா சினிமா, தொழில் என பிசியாக வலம் வருகிறார். இதுநாள் வரையில் அவ்வப்போது சீரியலில் கெஸ்ட் ரோலுக்கு மட்டும் தலைக்காட்டி வந்த வனிதா தற்போது புது சீரியல் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'மாரி' என்கிற புதிய தொடரில் 'சகுந்தலா' என்ற கதாபாத்திரத்தில் வனிதா நடித்து வருகிறார். அவரது என்ட்ரியே செம மாஸாக உள்ளது. சீரியல்களில் மற்ற நடிகைகள் எல்லாம் வில்லி கதாபாத்திரத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்து பேமஸ் ஆகி வருகின்றனர். வனிதாவிற்கு வில்லத்தனம் செய்வதெல்லாம் சாதரணமான விஷயம். எனவே, மாரி தொடரில் அவரது கதாபாத்திரம் மிகப் பெரிய அளவில் ரீச்சாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.