லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ராதிகா ப்ரீத்தி. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னதாகவே கன்னடத்தில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் எதுவும் வெற்றி படமாக அமையவில்லை.
அதன்பிறகு தமிழில் 2019 ஆம் ஆண்டு 'நாதிரு தின்னா' என்ற படத்தில் நடித்தார். அந்த படம் ரிலீஸாவதில் சிக்கல் எழுந்ததால் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தான் ராதிகா ப்ரீத்தி சின்னத்திரையை தேர்ந்தெடுத்தார். ராதிகாவின் அழகிய தோற்றம் தமிழ் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. இன்றைய நாளில் அதிக அளவு ரசிகர்களை கொண்ட சீரியல் நடிகைகளில் ராதிகா ப்ரீத்தியும் ஒருவர்.
சமீபத்தில் பூவே உனக்காக தொடரை விட்டு விலகிய ராதிகா ப்ரீத்தி சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருவதாக பேசப்பட்டு வந்தது. அதற்கு காரணம், தமிழில் அவர் நடித்திருந்த 'நாதிரு தின்னா' திரைப்படம் வெளியாவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்தது. படம் ரிலீஸான பிறகு சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் தான் ராதிகா ப்ரீத்தி சீரியலை விட்டு விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்துள்ள 'நாதிரு தின்னா' திரைப்படம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.