பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
வீஜேவாக தனது கேரியரை ஆரம்பித்த காஜல் பசுபதி, ஆரம்ப காலக்கட்டங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் 2009ம் ஆண்டு ராடன் நிறுவனம் தயாரித்த அரசி சீரியலில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய காஜல், சீரியல் பக்கம் திரும்பவேயில்லை. அதேசமயம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே, சமீப காலங்களில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கிளாமர் யுக்திகளையும் கையாண்டு வருகிறார். ஆனால், இதற்கிடையில் சீரியல் நடிகைகள் எல்லாம் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வர ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவருமே சீரியலில் நடித்து அதன் பிறகு தான் சினிமா வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த காஜல் பசுபதி, மைனா நந்தினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். அதேசமயம் தன்னுடைய மற்றொரு பதிவில், 'கமல் சார் படத்தில 3 பேருமே சீரியல் ஆர்டிட்ஸ்ட்டா? விஜய்சேதுபதிக்கு ஜோடியா? சூப்பர் ஜி சூப்பர். இதுக்கு நாங்களும் சீரியலே பண்ணியிருக்கலாம் போல!!' என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.