நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி |
வீஜேவாக தனது கேரியரை ஆரம்பித்த காஜல் பசுபதி, ஆரம்ப காலக்கட்டங்களில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் 2009ம் ஆண்டு ராடன் நிறுவனம் தயாரித்த அரசி சீரியலில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்திய காஜல், சீரியல் பக்கம் திரும்பவேயில்லை. அதேசமயம் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே, சமீப காலங்களில் மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க கிளாமர் யுக்திகளையும் கையாண்டு வருகிறார். ஆனால், இதற்கிடையில் சீரியல் நடிகைகள் எல்லாம் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வர ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக சிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்கள் மூவருமே சீரியலில் நடித்து அதன் பிறகு தான் சினிமா வாய்ப்பை பெற்றனர். இந்நிலையில் படத்தை பார்த்த காஜல் பசுபதி, மைனா நந்தினிக்கு வாழ்த்துகள் கூறியுள்ளார். அதேசமயம் தன்னுடைய மற்றொரு பதிவில், 'கமல் சார் படத்தில 3 பேருமே சீரியல் ஆர்டிட்ஸ்ட்டா? விஜய்சேதுபதிக்கு ஜோடியா? சூப்பர் ஜி சூப்பர். இதுக்கு நாங்களும் சீரியலே பண்ணியிருக்கலாம் போல!!' என வருத்தமாக பதிவிட்டுள்ளார்.