சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு சீசன் 6-ல் கலந்து கொண்டு டைட்டில் பட்டம் ஜெயித்தவர் பாலா. சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் இவர் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் கோமாளிகளில் ஷிவாங்கிக்கு அடுத்தப்படியாக முக்கியமான இடத்தில் இருக்கிறார். திரையில் காமெடியானாக தோன்றினாலும், நிஜத்தில் மிகவுன் செண்டிமெண்ட்டான சமூகப்பணியை பாலா செய்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த விஜய் டெலிவிஷன் அவார்டு நிகழ்ச்சியில் பாலாவுக்கு பெஸ்ட் காமெடியன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்து வரும் சமூகப்பணிகள் குறித்தும் முதல் முறையாக வெளியுலகுக்கு தெரிவிக்கப்பட்டது. பாலா, முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு பல உதவிகளை செய்து வருவதோடு, பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கும் உதவி செய்து வருகிறார். இந்த செய்தி தெரிவிக்கப்பட்டு அவருக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை பெற்றுக்கொண்ட பாலா, “நூறு பேருக்கு கல்வி கொடுக்காம நான் உயிர கொடுக்க மாட்டேன்... கடவுள்கிட்டயே சொல்றேன்!” என உணர்ச்சி ததும்ப பேசினார். இதை கேட்ட பிரபலங்கள் அவருக்கு எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர். தற்போது சமூக ஊடகங்களிலும் பாலாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.