பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வருபவர் வீஜே அர்ச்சனா. பாரதி கண்ணம்மாவின் வெண்பா கதாபாத்திரத்திற்கு பின் சின்னத்திரையில் அதிகம் பேசப்படும் வில்லியாக பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில், விஜய் டிவி விருது விழா சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் வீஜே அர்ச்சனாவின் தாயார், 'என் மகளை எல்லோரும் திட்டுறாங்க. பரீனாவுக்கு கூட கல்யாணம் ஆகி குழந்த இருக்கு. என் பொண்ணுக்கு இனிமே தான் எல்லாம் நடக்கனும். சீரியலில் வில்லி என்பது வெறும் நடிப்பு தான். வெளியில் அவர்களை பார்க்கும் போது வெறுப்பு காட்டாதீங்க. உங்களுக்காக தான் அவங்க நடிக்கிறாங்க' என உருக்கமாக பேசியுள்ளார்.
சீரியலில் வில்லி என்பது எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலத்தை தருமோ, அதேவேளையில் சில ரசிகர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க நேரிடும். அந்த வகையில் அர்ச்சனாவும் சில நெகட்டிவான கமெண்ட்டுகளை சின்னத்திரை ரசிகர்களிடமிருந்து பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.