பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

விஜய் டிவியில் 'நாம் இருவர் நமக்கு இருவர் 2'வில் ரச்சிதா ஹீரோயினாக நடித்து வந்த போது, அவருக்கு சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவருக்கும் விஜய் டிவி சீரியல் குழுவிற்கு இடையே சலசலப்பு ஏற்படவே, சில தினங்களில் ரச்சிதா அந்த தொடரை விட்டு வெளியேறினார். அதன்பிறகு அவர் சில நாட்கள் கழித்து கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில், விதவை தாய் கதாபாத்திரத்தில் ரச்சிதா நடிக்க இருந்த தகவல் வெளியாகி கவனம் ஈர்த்தது. அப்போது பலரும் ரச்சிதாவிடம் அந்த சேனலில் நடிக்கக் கூடாது என எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சமீபத்தில் லைவ் ஒன்றில் பேசிய ரச்சிதா, 'அந்த சேனலில் நடிக்காதீங்க! அந்த கதாபாத்திரத்தில் நடிச்சா பெயர் கெட்டுப்போகும்னு வாண்டட்டா வந்து பயமுறுத்தினாங்க. எங்க போனாலும் கெடுத்துவிடுறதுக்கு ஒரு கும்பல் இருக்கு' என தான் மிரட்டப்பட்ட கதையை தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'இது சொல்ல மறந்த கதை' தொடர் மக்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்து பாலிமர் சேனலில் தமிழில் டப்பாகி ஒளிபரப்பான 'நெஞ்சம் பேசுதே' தொடரின் ரீமேக் ஆகும். ரச்சிதா மற்றும் விஷ்ணு விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.