Advertisement

சிறப்புச்செய்திகள்

தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் | விக்ரம் உடன் முதல்முறையாக இணையும் அனிருத் | ஹிந்தியில் ரீ-மேக் ஆகும் ‛சங்கராந்திகி வஸ்துனம்' : அக் ஷய் நடிக்க வாய்ப்பு | நவம்பர் 28ல் ரீ-ரிலீஸ் ஆகும் ‛அஞ்சான்' | பிளாஷ்பேக்: ஏ வி எம் - விஜயகாந்த் கூட்டணியின் முதல் வெற்றித் திரைப்படம் “சிவப்பு மல்லி” | எங்கேயும் போக மாட்டேன், 13 வருட காத்திருப்பு போதும் : இயக்குனருக்கு உறுதி அளித்த பார்வதி | ரஜினி, தனுஷுக்கு அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை பார்க்கிறேன் ; நாகார்ஜுனா | 'ஏஜென்ட் மிர்ச்சி' ; ஸ்ரீ லீலாவின் முதல் பாலிவுட் பட லுக் வெளியானது | ‛அங்கமாலி டைரீஸ்' பட இயக்குனரின் ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர் ரஹ்மான் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சோலோ நாயகி ஆனார் ரக்ஷிதா மஹாலட்சுமி

28 ஜூன், 2024 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Rakshitha-Mahalakshmi-became-the-solo-heroine


சின்னத்திரையின் நட்சத்திர நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம், இளரவசி, சரவணன் மீனாட்சி, நாச்சியாபுரம் உள்ளிட்ட பல புகழ்பெற்ற தொடர்களில் நடித்தார். 'உப்பு கருவாடு' என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். இந்த படத்தில் அவர் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு மெய்நிகரி, எக்ஸ்ட்ரீம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது முழுமையான கதை நாயகியாக 'யூ ஆர் நெக்ஸட்' என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை ஐமேக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை பிரேம் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் மொஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். ஷரீப் இயக்குகிறார்.

ரக்ஷிதா சோலோ ஹீரோயினாக நடிக்க, அவருடன் கே.எஸ்.ரவிக்குமார், உதயா, ஜனனி, தினேஷ், திவ்யா கிருஷ்ணன், அர்ஷத், கேபிஒய் வினோத், ரபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கே.ஜி ரத்தீஷ் ஒளிப்பதிவாளராகவும், 'பேட்டை' வசந்த் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

படம் குறித்து இயக்குனர் ஷரீப் கூறும்போது “தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் இளைஞர்களைச் சுற்றி நடைபெறும் பல்வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஹாரர் பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகிறது. இது பான் இந்தியா திரைப்படமாக தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இத்திரைப்படத்தின் மூலம் புதுவிதமான அனுபவத்தை வழங்க இருக்கிறோம்” என்றார்.

ரக்ஷிதா மஹாலட்சுமி கூறும்போது, “இந்த படம் எனக்கு ஒரு புதிராகவே உள்ளது. கடைசி நிமிடத்தில் படத்தின் கதையை கூறினார்கள். கதை பிடித்திருந்ததாலும் படத்தில் நடிக்கும் சிறந்த நட்சத்திரங்களாலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். படத்தின் கதை ஹாரர் கதையம்சத்தை கொண்டது. அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் திரைப்படமாக இருக்கும்" என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஜூலை 26ல் வருகிறார் 'ராயன்': அதிகாரபூர்வ அறிவிப்புஜூலை 26ல் வருகிறார் 'ராயன்': ... 'அறம் செய்' ஒரு அரசியல் படம்: இயக்குனர் சொல்கிறார் 'அறம் செய்' ஒரு அரசியல் படம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !