மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையின் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். கடந்த 10 வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் எல்லாம் நடித்துவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்து அண்மையில் அவர் பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர், 'இதற்கு முன்பு இரண்டு கதைகளை கேட்டிருந்தேன். ஆனால், சொல்ல மறந்த கதையில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா கதாபாத்திரத்துடன் என்னால் தனிப்பட்ட முறையில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் வீட்டு உதவியாளர் ஒரு விதவை. குழந்தைகளுக்கான அவரது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். அவருடன் பேசி புரிந்து கொண்ட பின்பே சாதனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இன்று சமூக ஊடகங்கள் மக்களின் ரசனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் காதல், மனைவி, கணவர், மாமியார் என சீரியல்களை எடுக்க முடியாது. அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். எனவே, தொலைக்காட்சியில் நல்ல கதைகளை கொண்டு வருவது முக்கியம்' என கூறியுள்ளார்.