துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
'கண்ணான கண்ணே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், பப்லுவின் கதாபாத்திரம் முதலில் வில்லன் தோற்றத்தில் காட்டப்பட்டு வந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பார்க்கவே பாவமாக இருக்கும் பப்லுவின் மீது ரசிகர்களுக்கு ஒரு பாசம் பிறந்துள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இந்த தொடரில் போட்டோ பிரேமில் மட்டுமே வந்த நடிகை இனியா தற்போது எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ மட்டுமே இப்போது வரை முக்கிய கதாபாத்திரமாக நடித்து வந்தது. தற்போது கெளசல்யா கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கவுசல்யா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் குஷியடைந்துள்ளனர். இனியாவின் என்ட்ரிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியல் மேலும் பிரபலமாகும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.