சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் |

'கண்ணான கண்ணே' சீரியல் ரசிகர்கள் மத்தியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதிலும், பப்லுவின் கதாபாத்திரம் முதலில் வில்லன் தோற்றத்தில் காட்டப்பட்டு வந்த நிலையில், துரோகத்தால் வீழ்த்தப்பட்டு பார்க்கவே பாவமாக இருக்கும் பப்லுவின் மீது ரசிகர்களுக்கு ஒரு பாசம் பிறந்துள்ளது. இந்நிலையில் பல நாட்களாக இந்த தொடரில் போட்டோ பிரேமில் மட்டுமே வந்த நடிகை இனியா தற்போது எபிசோடுகளில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
கண்ணான கண்ணே தொடரில் கவுதமின் முதல் மனைவியான கவுசல்யா (இனியா) கதைப்படி இறந்துவிடுவார். அவரது போட்டோ மட்டுமே இப்போது வரை முக்கிய கதாபாத்திரமாக நடித்து வந்தது. தற்போது கெளசல்யா கதாபாத்திரம் என்ட்ரி கொடுக்கும் ப்ளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. கவுசல்யா பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்த ரசிகர்கள் இதனால் குஷியடைந்துள்ளனர். இனியாவின் என்ட்ரிக்கு பிறகு கண்ணான கண்ணே சீரியல் மேலும் பிரபலமாகும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.




