சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். இவர் அண்மையில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி போயினர். நவீன் சீரியலை விட்டு விலகுகிறாரா எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில், அவர் அப்படி சொல்லியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரின் போட்டோவையும் பதிவிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை கண்மணி சேகரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் பாடலை பதிவிட்டுள்ளார். இது ஒரு திருமண பாடலாகும். இதை வைத்து பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இருவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். கண்மணி சேகரின் ரசிகர்களோ ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகின்றனர். எது எப்படியோ? அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி.