படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'இதயத்தை திருடாதே' சீரியலில் சிவா என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் நவீன். இவர் அண்மையில் 'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' என பதிவிட்டிருந்தார். இதற்கு அர்த்தம் புரியாமல் பலரும் குழம்பி போயினர். நவீன் சீரியலை விட்டு விலகுகிறாரா எனவும் பேசி வந்தனர்.
இந்நிலையில், அவர் அப்படி சொல்லியதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நவீன் தனது அம்மாவுடன் செய்திவாசிப்பாளர் கண்மணி சேகரின் போட்டோவையும் பதிவிட்டு காதல் எமோஜியை பதிவிட்டுள்ளார். இதை கண்மணி சேகரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு பின்னணியில் கனா காண்கிறேன் பாடலை பதிவிட்டுள்ளார். இது ஒரு திருமண பாடலாகும். இதை வைத்து பார்க்கும் போது நவீனும், கண்மணியும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தெரிகிறது.
இருவருக்கும் நிறைய ரசிகர்கள் உள்ளதால் இந்த செய்தி வைரலாக பரவி வருகிறது. பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர். கண்மணி சேகரின் ரசிகர்களோ ஏக்கத்துடன் பெருமூச்சு விட்டு வருகின்றனர். எது எப்படியோ? அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி.