இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வருகிற 21ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் புதிய தொடர் நம்ம மதுரை சிஸ்டர்ஸ். திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மதுரை மாநகரைப் பின்புலமாக கொண்டிருக்கும் கதையான 'நம்ம மதுரை சிஸ்டர்ஸ்' ஒவ்வொருவரும் தனித்துவமான பண்பியல்புகளை கொண்டிருக்கும் நான்கு உடன்பிறந்த சகோதரிகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. பெற்றோர்களை இளம்வயதிலேயே பறிகொடுத்த பிறகு குடும்ப பொறுப்புகள் தலை மீது விழுகிற இந்திராணி என்ற இளம்பெண்ணின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இக்கதையில் அன்பு, பாசம் மற்றும் அதிரடி திருப்பங்கள், எதிர்பாரா நிகழ்வுகள் இடம் பெறுகிறது.
தனது பெற்றோர்களின் மரணத்திற்கு காரணமானவர்களை எதிர்த்து போராடி வாழ்வில் ஜெயிக்கவும் தனது சகோதரிகளை பாதுகாப்பாக பேணி வளர்க்கவும் உறுதிமொழி ஏற்கும் இந்திராணி, ஒரு அப்பாவி என்ற இளம் பெண் நிலையிலிருந்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய மன உறுதிவாய்ந்த பெண்ணாக எப்படி புதிய அவதாரம் எடுக்கிறார், அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கதை.
இதில் சாயாசிங் இந்திராணியாக நடிக்கிறார். அவரது சகோதரிகளாக சுனிதா, சங்கவி, மற்றும் ஐரா அகர்வால் நடிக்கிறார்கள். தீபக் குமார், ஐரா அகர்வால் ஜோடியாக நடிக்கிறார்.
இந்த தொடர் பற்றி நடிகை சாயாசிங் கூறியதாவது: குடும்பத்தில் வழக்கமாக ஆண்கள் தான் குடும்பத் தலைவர்களாக இருக்கின்றனர். நம்ம மதுரை சிஸ்டர்ஸ் கதையில் எனது கதாபாத்திரம், குடும்பங்களை ஒருங்கிணைப்பதிலும் மற்றும் எதிர்கால தலைமுறையினருக்கு வழிகாட்டுவதிலும் ஆண்களுக்கு நிகரான திறன் கொண்ட பெண்ணாக உருவாக்கப்பட்டுள்ளது. என்றார்.