ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் | சுரேஷ்கோபி படத்துக்காக ஒரு ஊரே ஒரு வாரத்திற்கு திருவிழா கோலத்துக்கு மாறியது | தக் லைப் நடிகருக்கு பதிலடி கொடுத்து வெளியிட்ட பதிவை நீக்கிய இயக்குனர் | இந்திய திரைப்படத்திற்கான அங்கீகாரம் : கமல் | கல்கி 2898 ஏடி ஓராண்டு நிறைவு : அமிதாப்பச்சன் வெளியிட்ட பதிவு | சொர்க்கத்தில் இன்னொரு நாள் : சுற்றலா கொண்டாட்டத்தில் சூர்யா, ஜோதிகா | டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது | சமந்தா, கீர்த்தி சுரேஷ் திடீர் சந்திப்பு |
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து சித்து கதாபாத்திரத்தில் சீரியல் நடிகர் விஷ்னுகாந்த் நடிக்கவுள்ளார். விஷ்னுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' தொடரின் மூலம் விஷ்னுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'என்றென்றும் புன்னகை' தொடர் திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
முன்னதாக ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமாருக்கு அவருடைய காதலியும் சின்னத்திரை நடிகையுமான அபிநவ்யாவுடன் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இதனையடுத்து தீபக் என்றென்றும் புன்னகை தொடரை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் அவர் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய ப்ராஜெக்டில் கமிட்டாகியிருப்பதால், ஜீ தமிழ் சேனலை விட்டு வெளியேறிவிட்டதாக சொல்கிறார்கள்.