பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சென்னை : தனது நேயர்களுக்குபொழுதுபோக்கின் மூலம் மகிழ்ச்சியை அள்ளி வழங்குவதே ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நோக்கமாகும். இந்த வாரயிறுதி விடுமுறையை சிறப்பானதாக மாற்ற நாளை (ஜனவரி 30), மதியம் 3.30மணிக்கு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்ட கிரைம் திரைப்படம் - 'சித்திரை செவ்வானம்'உங்கள் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது.
சண்டைப் பயிற்சியாளர் ஸ்டன்ட் சில்வா இத்திரைப்படத்தில் இயக்குனராக முதல்முறையாக களமிறங்கியுள்ளார். நடிகை சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் நாயகியாக அறிமுகமான சித்திரை செவ்வானத்தில் நடிகர் சமுத்திரக்கனி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தந்தை-மகளான முத்துப்பாண்டி (சமுத்திரக்கனி)மற்றும் ஐஷ்வர்யா (பூஜா கண்ணன்) கதாப்பாத்திரங்களை சுற்றியே கதை நகர்கிறது.
மருத்துவராக வேண்டும் என்கிற தனது மகளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே முத்துவின் ஒரே இலட்சியமாக உள்ளது. ஆனால் மகள் காணாமல் போக அவரது உலகமே தலைகீழாக மாறுகிறது. ஒரு விவசாயியான முத்துப்பாண்டி, தன் மகளின் நற்பெயரை கெடுக்க நினைத்த குற்றவாளிகளைஎதிர்த்து ஜெயித்து, காணாமல் போன தன் மகளையும் கண்டுபிடிக்கும் இத்திரைப்படம் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
உணர்வுபூர்வமான இந்த தந்தை மகளின் கதையைக் காண, வரும் ஜனவரி 30, மதியம் 3:30 மணிக்கு 'சித்திரை செவ்வானம்' திரைப்படத்தைஜீ தமிழ் தொலைக்காட்சியைக் காணத்தவறாதீர்கள்.