‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலாக கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த குரலும் ஒரு காரணம். முதல் நான்கு சீசன்களின் போதும் பிக்பாஸின் குரலாக ஒலிப்பது யாருடைய குரல் என்று யாருக்குமே தெரியாது. நான்காவது சீசனின் முடிவில் தான் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியிடப்பட்டது. தமிழில் ஒளிபரப்பான 5 சீசனுக்குமே பிக்பாஸுக்கு குரல் கொடுத்தவர் சாஷோ என்ற வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான்.
டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட்டிலும் கலக்குவார், அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்த்தும், தேவையான சமயம் ஆறுதல் சொல்லியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அவர் சம்பளம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சாஷோவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் சாஷோ தான் குரல் கொடுக்கவுள்ள நிலையில், அதில் அவருக்கு தொகை பெரிய சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




