ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி | கவியூர் பொன்னம்மாவின் மறைவும் மஞ்சு வாரியரின் நிறைவேறாத ஆசையும் | செப்டம்பர் 27ல் நான்கு முனைப் போட்டி | 'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் |
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸின் குரலாக கம்பீரமாக ஒரு குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு அந்த குரலும் ஒரு காரணம். முதல் நான்கு சீசன்களின் போதும் பிக்பாஸின் குரலாக ஒலிப்பது யாருடைய குரல் என்று யாருக்குமே தெரியாது. நான்காவது சீசனின் முடிவில் தான் பிக்பாஸ் குரல் யாருடையது என்ற தகவல் வெளியிடப்பட்டது. தமிழில் ஒளிபரப்பான 5 சீசனுக்குமே பிக்பாஸுக்கு குரல் கொடுத்தவர் சாஷோ என்ற வாய்ஸ் ஆர்டிஸ்ட் தான்.
டப்பிங் ஆர்டிஸ்டாக மட்டுமில்லாமல் ஸ்கிரிப்ட்டிலும் கலக்குவார், அவ்வப்போது போட்டியாளர்களை கலாய்த்தும், தேவையான சமயம் ஆறுதல் சொல்லியும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சூப்பராக நடத்தி வருகிறார். அவர் சம்பளம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு சாஷோவுக்கு மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் சாஷோ தான் குரல் கொடுக்கவுள்ள நிலையில், அதில் அவருக்கு தொகை பெரிய சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.