இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் ஜீ தமிழ் தொலைக்காட்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த சேனலில், குழந்தைகளுக்கான பிரத்யேக நிகழ்ச்சியாக 'ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4' நிகழ்ச்சி ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது. கடந்த ஜனவரி 15 ஆம் தேதி ஒளிபரப்பான அந்நிகழ்ச்சியின் எபிசோடில் இரு சிறுவர்கள் இணைந்து, வடிவேலுவின் இம்சை அரசன் பாணியில் நாட்டு நடப்பை கிண்டல் செய்து நடித்திருந்தார்கள். அது தற்கால அரசியல் சூழலோடு ஒத்துப்போகும் வகையில் அமைந்திருந்தது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியினர், அந்நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பாஜக கட்சி சார்பில், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எழுதிய கடிதத்தில், 'நிகழ்ச்சியின் குறிப்பிட்ட அந்த பகுதியில் நடித்திருந்த சிறுவர்களுக்கு அந்த காட்சியின் தன்மையையோ அல்லது உண்மை நிலையையோ அறிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்கள் குழந்தைகள். ஆனால், காமெடி என்ற பெயரில் குழந்தைகள் மீது அந்த கான்செப்ட் திணிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி முழுவதிலுமே நடுவர்களும், தொகுப்பாளர்களும் சிறுவர்களின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர். இது, அந்த சேனலை பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தவறான கண்ணோட்டத்தை தேசிய அளவில் உருவாக்குகிறது.
எனவே, இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்த சேனல், நிகழ்ச்சி தயாரிப்பாளர், நடுவர்கள், தொகுப்பாளர்கள் என அனைவரும் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.