கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
தமிழ் சின்னத்திரையில் செல்ல தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி என்ற டிடி. தற்போது சினிமாவில் நடிப்பது குறித்து கவனம் செலுத்தி வரும் டிடி, சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக மீண்டும் சின்னத்திரை வந்துள்ளார். எப்போதும் குழந்தை தனத்துடன் ஜாலியாக போஸ்ட் போட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி, சமீபத்தில் வீல்சேரில் இருப்பது போல் போட்டை ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இதனையடுத்து அவருக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதா என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அதற்கு விளக்கமளித்துள்ள டிடி, 'எனக்கு முடக்குவாதம் இருப்பதால் நீண்ட தூரம் நடக்க முடியாது அதற்காக தான் வீல் சேர் பயன்படுத்தினேன். ஆனால் இந்த முடக்குவாதத்தால், எனக்குள் இருக்கும் குழந்தை தன்மையை ஒருபோதும் தடுக்க முடியாது' என கூறியுள்ளார்.
ஒருபுறம் டிடிக்கு முடக்குவாதம் என்று தெரிந்தவுடன் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், அதேசமயம் டிடி அதை பாசிட்டிவாக அணுகுவதை கண்டு பாராட்டி மகிழ்ந்து வருகின்றனர்.
டிடி தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' பிக்பாஸ் வருணின் 'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.