மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகியுள்ள விலாசினி, ஆர்ஜே, டப்பிங் ஆர்டிஸ்ட், சிங்கர் என பன்முக திறமை கொண்டவர். திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் நெருங்கிய உறவினர் தான் இந்த விலாசினி. இசைகுடும்பத்தில் பிறந்ததால் இவரும் பாடகியாக வர வேண்டும் என்றே முதலில் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வாய்ப்புகள் தேடி அலைந்தவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
பிரியாணி படத்தில் மட்டும் சில வரிகள் பாடியிருந்தார். தொடந்து பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆர்ஜேவாக சில காலம் பணியாற்றினார். அதன்பிறகு ஆதித்யா டிவியில் சில காலங்கள் வீஜேவாக இருந்த அவர், அதன் பிறகு படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
ஆனால், நிறத்தின் காரணமாக சினிமாவிலும் நிராகரிக்கப்பட்ட விலாசினிக்கு விஜய் டிவி தான் கடைசியில் சீரியலில் நடிக்க வாய்ப்பு அளித்தது. விலாசினி தற்போது விஜய் டிவியின் பாவம் கணேசன் தொடரின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார்.
கேரியர் என்பதை தாண்டி, சொந்த வாழ்க்கையிலும் கணவரின் கொடுமையால் துன்பத்திற்கு ஆளான விலாசினி, அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தற்போது நடிப்பிலும் ரசிகர்களை மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
விலாசினிக்கு தற்போது ரசிகர்கள் பலரும் தங்கள் அன்பு மழையை பொழிந்து வருகின்றனர். மகிழ்ச்சி மழையில் நனைந்திருக்கும் விலாசினி புதிய போட்டோஷூட்டுகள் மூலம் சோஷியல் மீடியாவிலும் பிரபலமாகி வருகிறார்.