300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தென்னிந்திய மொழிகளின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். திருமணத்துக்கு பின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யாவுக்கு சூர்யாவின் ஆறு படத்தில் நடித்த சவுண்ட் சரோஜா கதாபாத்திரம் நீண்ட நாளுக்கு பிறகு கம்பேக்காக அமைந்தது. தொடர்ந்து தற்போதும் அவ்வப்போது தென்னிந்திய படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது மகள் அனன்யாவுடன் சமீபத்தில் டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான போது மீடியாக்களின் பார்வை மீண்டும் ஐஸ்வர்யா பக்கம் திரும்பியது. இதனால் அவருக்கு தற்போது சீரியலில் நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.
ஐஸ்வர்யா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' என்ற புதிய சீரியலில் இணைந்துள்ளார். ஐஸ்வர்யா, நினைத்தாலே இனிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அடுத்துவரும் எபிசோடுகளில் அவரது முக்கியத்துவம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.