துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
அன்பே வா சீரியல் முடியப்போகிறது என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வந்த நிலையில் அது உண்மை இல்லை என அதில் நடித்து வரும் நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்.
முன்னணி டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று அன்பே வா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முக்கிய வில்லி கதாபாத்திரமான பூமிகாவின் மாமியார் திருந்திவிடுகிறார். மேலும், வருணுக்கும் பூமிகாவிக்கும் இடையே நீண்ட நாட்களாக மறைந்திருந்த உண்மையும் வெளிவந்து விடுகிறது. 300 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள அன்பே வா தொடரில் இரண்டு முக்கியமான பிரச்னைகள் அடுத்தடுத்து சரியானது போல் காட்சிபடுத்தபட்டுள்ளது. எனவே அன்பே வா சீரியல் தொடர்ந்து எப்படி நகரப் போகிறது என்ற கேள்வியுடன் பலரும் இந்த சீரியல் முடிந்து விடும் என பேசி வந்தனர்.
இந்நிலையில் இந்த தொடரில் நடித்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஹேமதயாள் அன்பே வா சீரியல் முடியவில்லை. பல திருப்பங்களுடன் மீண்டும் ஜொலிக்க போகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.