காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "புது புது அர்த்தங்கள்" தொடர் 200 எபிசோடை தொட்டு உள்ளது. அபிஷேக் - தேவயாணி முதன்மை வேடத்தில் நடிக்கும் இந்த தொடர் பெண்களின் மீதுள்ள இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தை மாற்ற முயற்சிக்கும் விதமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற நெடுந்தொடர்களிலிருந்து தனித்து வித்தியாசமாக இருக்கும் இந்த தொடரானது, ஒரு மாமியார் - மருமகள் இடையிலான அன்பான உறவினை மையமாக கொண்டுள்ளது. தனது குடும்பத்தின் மகிழ்ச்சியைச் சுற்றியே தனது வாழ்வினை அமைத்துக்கொண்டு, வீட்டிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நற்குணமுள்ள பெண்ணாக லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானி நடித்துள்ளார். இதுவரை இத்தொடரில், வழக்கத்தை மாற்றியமைக்கும் பல்வேறு கதைத் திருப்பங்கள் அரங்கேறியுள்ளன.
சமீபத்தில் ஒளிபரப்பான இத்தொடரின் அத்தியாயங்களில் அபிஷேக்காக நடித்த ஹரி கிருஷ்ணன் மற்றும் லக்ஷ்மி கதாபாத்திரங்களின் திருமணம் எதிர்பாராத சூழ்நிலையில் நிகழ்ந்தது. திருமணம் முடிந்த பின்பு தொடர்ச்சியாக பல்வேறு மகிழ்ச்சியற்ற தருணங்களை கடக்க நேர்கிறது. அதனைத் தொடர்ந்து லக்ஷ்மி தனது சொந்தக் காலில் நிற்கவும், வேறு எவருடைய ஆதரவும் இல்லாமல் தனக்கான மரியாதையைத் தானே ஈட்டுவதற்கும் முடிவெடுக்கிறாள். தொடரின் 200-வது அத்தியாயத்திலிருந்து, தனக்கு பிடித்த சமையல் துறையில் சாதிக்க வேண்டுமெனக் கடினமாக உழைக்கும் ஒரு மன உறுதிமிக்க லக்ஷ்மியை ரசிகர்கள் காணலாம். வெறும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோக்கிய தேடலாக இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை; பெண்கள் உழைத்து தங்களது கனவுகளை சாதித்து, சுதந்திரமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் பறைசாற்றவுள்ளது.