புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பல்வேறு தடைகளை உடைத்து இன்று சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஷெரின் ஜானு .
விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரில் வரும் துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷெரின் ஜானு சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். ஆனால், ஷெரின் இந்த இடத்தை சாதரணமாக பிடித்துவிடவில்லை. தன் சொந்த குடும்பத்தையே எதிர்த்து தான் சாதித்து காட்டியிருக்கிறார். சென்னையில் பிறந்த ஷெரின் இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஷெரின் முதலில் டிக் டாக் வீடியோக்களின் மூலம் பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு ஆல்பம் சாங்கில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஷெரின் குடும்பத்தினருக்கு அவர் நடிக்க செல்வது சுத்தமாக பிடிக்கவில்லை. நடிப்பதற்காக மிகவும் போராடிய ஷெரினுக்கு அவரது தாயார் மட்டும் துணையாக இருந்து ஊக்கப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் கலர்ஸ் டிவியின் திருமணம் சீரியலில் அறிமுகமான ஷெரின் நெகடிவ் ஷேடில் நடித்து தன் திறமையை நிரூபித்தார். தொடர்ந்து நடிகை குஷ்புவுடன் இணைந்து லெட்சுமி ஸ்டோர்ஸ் தொடரிலும் ஜொலித்தார். தொடர்ந்து விஜய் டிவி, ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் நடித்து வரும் ஷெரின் தற்போது சின்னத்திரையின் முன்னணி நட்சத்திரமாக மாறியுள்ளார். லீட் ரோலில் நடிக்காமலேயே மிக குறுகிய காலக்கட்டத்தில் தனக்கான தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ஷெரின் ஜானு சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் நடிகையாகவும் பிரபலமாகியுள்ளார்.