ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலை ஒளிபரப்புவதில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது ஜி தமிழ். இந்நிலையில் சமீபத்தில் ஜி தமிழில் ஒளிபரப்பாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்த 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'சத்யா' ஆகிய தொடர்கள் வருகிற 24ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து இந்த தொடர்களின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், சீரியல்களை தொடரும்படி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பல்வேறு முறைகளில் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
இந்த தொடர்களுக்கு மக்களிடம் கிடைத்துவரும் வரவேற்பை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அதிரடியான ப்ரோமோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் மக்கள் சீரியலை நிறுத்த வேண்டாம் என்பது போல் போராடியும் வேண்டுகோளும் வைத்து வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு ஊருல 2 ராஜகுமாரி என்ற டைட்டிலுடன் ராசாத்திக்கு அவரை போலவே குண்டாக ஒரு குழந்தை இருப்பதாகவும், சத்யா-2 என்ற டைட்டிலுடன் பிரபு விரும்பிய படி சத்யா குடும்ப பெண்ணாக மாறியிருப்பது போலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதி இரண்டு தொடர்களின் இறுதி அத்தியாயம் முடிகிறது. அதேசமயம் 25ம் தேதி முதல் புதிய பொலிவுடன் இரண்டு சீரியல்களின் இரண்டாவது சீசன் ஆரம்பமாகவுள்ளது என்பதை 'நாங்க நிறுத்தல... ஆரம்பிக்கிறோம்' என ப்ரோமோவின் மூலம் ஜி தமிழ் தெரிவித்துள்ளது. புதிதாக வெளிவந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.