படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
ஜி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.
தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியலை ஒளிபரப்புவதில் முன்னணி இடத்தில் இருந்து வருகிறது ஜி தமிழ். இந்நிலையில் சமீபத்தில் ஜி தமிழில் ஒளிபரப்பாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்று வந்த 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'சத்யா' ஆகிய தொடர்கள் வருகிற 24ம் தேதியோடு நிறுத்தப்படுவதாக தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது. இதனையடுத்து இந்த தொடர்களின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும், சீரியல்களை தொடரும்படி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பல்வேறு முறைகளில் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
இந்த தொடர்களுக்கு மக்களிடம் கிடைத்துவரும் வரவேற்பை புரிந்து கொண்ட தொலைக்காட்சி நிறுவனம், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அதிரடியான ப்ரோமோ ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில் மக்கள் சீரியலை நிறுத்த வேண்டாம் என்பது போல் போராடியும் வேண்டுகோளும் வைத்து வருவதாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஒரு ஊருல 2 ராஜகுமாரி என்ற டைட்டிலுடன் ராசாத்திக்கு அவரை போலவே குண்டாக ஒரு குழந்தை இருப்பதாகவும், சத்யா-2 என்ற டைட்டிலுடன் பிரபு விரும்பிய படி சத்யா குடும்ப பெண்ணாக மாறியிருப்பது போலும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது.
வருகிற 24ம் தேதி இரண்டு தொடர்களின் இறுதி அத்தியாயம் முடிகிறது. அதேசமயம் 25ம் தேதி முதல் புதிய பொலிவுடன் இரண்டு சீரியல்களின் இரண்டாவது சீசன் ஆரம்பமாகவுள்ளது என்பதை 'நாங்க நிறுத்தல... ஆரம்பிக்கிறோம்' என ப்ரோமோவின் மூலம் ஜி தமிழ் தெரிவித்துள்ளது. புதிதாக வெளிவந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.