லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தெலுங்கு டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் எவரு மீலோ கோடீஸ்வரரு நிகழ்ச்சியை ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் அவ்வப்போது சிறப்பு பங்கேற்பாளராக சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள்.
இதுவரை ராம் சரண், இயக்குநர் ராஜமவுலி, கொரடலா சிவா, மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டார்கள். தற்போது சமந்தாவும் கலந்து கொண்டிருக்கிறார். அதோடு கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்து 25 லட்சத்தை பரிசாக வென்று இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் தனது திரையுலக பயணம் பற்றி பேசி இருக்கிறாராம். தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ நாகசைதன்யா பிரிவு பற்றியோ பேசவில்லையாம். இக்கட்டான மனநிலையிலும் கூட ஒத்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விக்கு தெளிவான பதிலை கூறிய சமந்தாவின் மனநிலையை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தசரா பண்டிகை ஸ்பெஷலாக அக்டோபர் 15ம் தேதி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.