கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகை சமந்தா தனது கணவரைப் பிரிந்ததாக அறிவித்தவுடன் நடிகர் சித்தார்த் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் "ஏமாற்றுபவர்கள் எப்போதும் முன்னேறுவதில்லை என்று என் ஆசிரியர் கற்றுக் கொடுத்திருக்கிறார்" என்று பதிவிட்டிருந்தார்.
சித்தார்தின் டுவீட் சமந்தாவை குறிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் சில காலம் காதலில் இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமந்தா பின்னர் தான் நாகசைதன்யாவைத் திருமணம் செய்து கொண்டார்.
சித்தார்த் வெளியிட்ட அந்தப் பதிவிற்கு பல கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில் சித்தார்த் தன் பதிவு குறித்து விளக்கமளித்துள்ளார். "ஒவ்வொரு நாளும் நான் என் மனதில் தோன்றுவதை டுவீட் செய்கிறேன், தெருநாய்களைப் பற்றி நான் டுவீட் செய்தால், அது அவர்களுக்கானது என்று மக்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல" என்று சித்தார்த் தெரிவித்துள்ளார்.
மேலும் "தனது டுவீட்களை தேவையற்ற சர்ச்சைகளுக்குள் இழுத்து பெரியதாக ஆக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். "என் வாழ்க்கையில் விரும்பாதவர்களை விட நான் என் வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படுகிறேன். எனவே ஊடகங்களின் வதந்திகளுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை” என்றும் சித்தார்த் தெரிவித்துள்ளார்.