''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்டர்'. இப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்திற்கான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியா வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர்களின் தொகைக்கு தியேட்டர்காரர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், படத்திற்கான முன்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான நிலையில் இந்த ஏரியாக்களில் இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை.
சென்னை ஏரியாவில் இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்திற்கு அதிக விலை சொல்வதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சரிவர வசூல் செய்யாத காரணத்தால் தியேட்டர்காரர்கள் தரப்பில் விலையைக் குறைத்துக் கேட்பதாகவும் சொல்கிறார்கள். இன்று மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் எனத் தெரிகிறது. அதன்பிறகுதான் முன்பதிவு ஆரம்பமாகுமாம்.