மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டாக்டர்'. இப்படம் நாளை மறுநாள் அக்டோபர் 9ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.
இப்படத்திற்கான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியா வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகஸ்தர்களின் தொகைக்கு தியேட்டர்காரர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால், படத்திற்கான முன்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு ஆரம்பமான நிலையில் இந்த ஏரியாக்களில் இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை.
சென்னை ஏரியாவில் இப்படத்திற்கான முன்பதிவு இன்னும் ஆரம்பிக்காமல் இருப்பது ரசிகர்களிடம் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. படத்திற்கு அதிக விலை சொல்வதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் சரிவர வசூல் செய்யாத காரணத்தால் தியேட்டர்காரர்கள் தரப்பில் விலையைக் குறைத்துக் கேட்பதாகவும் சொல்கிறார்கள். இன்று மாலைக்குள் பேச்சுவார்த்தை முடிவடையும் எனத் தெரிகிறது. அதன்பிறகுதான் முன்பதிவு ஆரம்பமாகுமாம்.