இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா அலைகளின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். ஆனாலும், பல நடிகைகள் பக்கத்தில் உள்ள மாலத் தீவிற்குச் சென்று வந்தார்கள். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை தங்கள் அழகால் அதிசயிக்க வைத்தார்கள்.
கீர்த்தி சுரேஷ் இப்போது தன்னுடைய விடுமுறைக்காக ஸ்பெயின் பறந்துள்ளார். அதன் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நான் இப்போது விடுமுறையில், ஒவ்வொரு நாளும் தான், ஏனென்றால் நான் எனது தொழிலை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் கீர்த்தி தற்போது ஸ்பெயின் சென்றுள்ளார். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.