‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் 'அண்ணாத்த, சாணி காயிதம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக 'சர்க்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்து வருகிறார்.
கொரோனா அலைகளின் காரணமாக பல சினிமா பிரபலங்கள் எந்த வெளிநாட்டிற்கும் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தார்கள். ஆனாலும், பல நடிகைகள் பக்கத்தில் உள்ள மாலத் தீவிற்குச் சென்று வந்தார்கள். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களை தங்கள் அழகால் அதிசயிக்க வைத்தார்கள்.
கீர்த்தி சுரேஷ் இப்போது தன்னுடைய விடுமுறைக்காக ஸ்பெயின் பறந்துள்ளார். அதன் புகைப்படம், வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு, “நான் இப்போது விடுமுறையில், ஒவ்வொரு நாளும் தான், ஏனென்றால் நான் எனது தொழிலை நேசிக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'சர்க்காரு வாரி பாட்டா' படத்தின் படப்பிடிப்பிற்காகத்தான் கீர்த்தி தற்போது ஸ்பெயின் சென்றுள்ளார். இப்படம் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.