வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

தமிழில் ‛மேகா படம் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தவர் சிருஷ்டி டாங்கே. ‛டார்லிங், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் அமைதியாக வந்து சென்ற இவர், ‛ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான, ‛சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. ஆனால் முதல் நபராக அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் அளித்த பிரத்யேக பேட்டி:
இந்த நிகழ்ச்சியில் நானே விருப்பப்பட்டு தான் பங்கேற்றேன். ரொம்ப ‛ரிஸ்க் என்பது தெரியும். ‛அட்வெஞ்சர் மிகவும் பிடிக்கும். சர்வைவர் வாழ்க்கையை வாழ நினைத்தேன். என் முதல் ரியாலிட்டி ஷோ இது. அதனால், அனுபவத்திற்காகவே இதில் பங்கேற்றேன். நான் எவ்வளவு உறுதியான பெண் என்பதையும் காட்ட நினைத்தேன். அது எனக்கும் தெரிய வேண்டும்.
![]() |
இந்த நிகழ்ச்சி ஏற்கனவே திரைக்கதையாக உருவாக்கி எடுக்கப்பட்டது இல்லை. அப்படியிருந்தால் நான் முதலில் வெளியேறி இருக்க மாட்டேன். காட்டில் முதல் நாள் ரொம்பவே சிரமப்பட்டோம். குளிப்பது உள்ளிட்ட காலைக்கடன்களை கூட சரியாக செய்ய முடியவில்லை. முதல் மூன்று நாள் சரியாக சாப்பிட முடியாமல் பசியில் அவதிப்பட்டேன். மூன்று நாளும் பழங்கள் மட்டுமே சாப்பாடு. தண்ணீர் மட்டுமே சுத்தமாக இருந்தது. உடலில் சில தடிப்புகளும் வந்து விட்டது. இன்னும் முழுமையாக சரியாகவில்லை.
![]() |




