துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழ் சினிமாவும், தெலுங்கு சினிமாவும் பல வருடங்களாக ஒன்றுக்கொன்று இணைந்தே செயல்பட்டு வருகிறது. இரண்டு மொழிப் படங்களுக்கும் பெரிய வித்தியாசங்களைப் பார்க்க முடியாது.
தமிழ் இயக்குனர்கள் தெலுங்கிலும், தெலுங்கு இயக்குனர்கள் தமிழிலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள். தெலுங்குத் திரையுலகத்தில் முக்கிய இயக்குனர்களாக இருக்கும் சேகர் கம்முலா, வம்சி பைடிப்பள்ளி இருவரும் அடுத்து தமிழ் நடிகர்களை வைத்து படங்களை இயக்க உள்ளார்கள்.
சேகர் இயக்கத்தில் தனுஷ், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கப் போகிறார்கள். சேகர் - தனுஷ் கூட்டணி பற்றிய அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. வம்சி - விஜய் கூட்டணி பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த இரண்டு படங்களுமே பான்-இந்தியா படங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
தெலுங்கு ஹீரோக்கள்தான் சமீப காலமாக பான்-இந்தியா படங்களாக நடித்து வருகிறார்கள். அதை தற்போது தனுஷ், விஜய் இருவரும் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள். அந்த வரிசையில் அடுத்து யார் தெலுங்கு இயக்குனருடன் இணையப் போகிறார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானால் அதற்கு ஓடிடி உரிமையாக கணிசமான தொகை கிடைத்து விடுகிறது. அதனால்தான் பலரும் பான்-இந்தியா படங்கள் பக்கம் திரும்புகிறார்கள் எனத் தெரிவிக்கிறார்கள்.