என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் | சுவர் ஏறி குதித்து குழந்தையை காப்பாற்றிய திஷா பதானியின் தங்கை : குவியும் பாராட்டுக்கள் | 18வது திருமண நாளில் 'பேமிலி' புகைப்படத்தைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ராய் | மகேஷ்பாபுவுக்கு நேரில் ஆஜராக அமலாக்கத் துறை நோட்டீஸ் | கதை நாயகனாக நடிக்கும் 'காக்கா முட்டை' விக்னேஷ் | 'நிழற்குடையில்' கதை நாயகியாக நடிக்கும் தேவயானி | கால் பாதத்தை டீ ஸ்டாண்ட் ஆக மாற்றிய மம்முட்டி ; வைரலாகும் புகைப்படம் | த்ரிஷ்யம்-3க்கு முன்பாக புதிய படத்தை ஆரம்பித்த ஜீத்து ஜோசப் |
தெலுங்குத் திரையுலகத்தில் கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு லவ் ஸ்டோரி படத்திற்குக் கிடைத்த வரவேற்பு தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள அந்தப் படத்திற்கு பவன் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தி வரும் இசைக் கல்லூரியில் படித்தவர்.
லவ் ஸ்டோரி படம் குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பு மகேஷ் பாபு டுவீட் செய்தது அந்தப் படத்திற்கு மேலும் வரவேற்பைக் கூட்டியுள்ளது. அவரது டுவீட்டில் இசையமைப்பாளர் பவன் பற்றி, “பவனிடமிருந்து இன்னும் பலவற்றைக் கேட்க உள்ளோம். என்ன ஒரு இசையமைப்பு, உணர்ச்சிமிக்க ஒன்று. அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் மாணவர் எனக் கேள்விப்பட்டேன். ரஹ்மான் சார், அவரைப் பற்றி நீங்கள் பெருமைப்படலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மகேஷ்பாபுவின் டுவீட்டுக்கு ஏஆர் ரஹ்மான், “ஆமாம், அவர் மிகத் திறமை வாய்ந்தவர், பணிவானவர். எங்களது இசைக் கல்லூரியில் உள்ள அனைவரும் அவருடைய வெற்றிக்காக உண்மையில் பெருமைப்படுகிறோம், எல்லாப் புகழும் இறைவனுக்கே,” என பதிலளித்துள்ளார்.
லவ் ஸ்டோரி படத்தில் பவன் இசையமைத்துள்ள சாரங்க தரியா பாடல் யு டியுபில் ஏற்கெனவே, 328 மில்லியனைக் கடந்துள்ளது. படத்தில் உள்ள மற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.