முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் தமிழில் மூட்டை கட்டிய காஜல் |
சேகர் கம்முலா இயக்கத்தில், நாக சைதன்யா, சாய் பல்லவி மற்றும் பலர் நடித்துள்ள 'லவ் ஸ்டோரி' தெலுங்குப் படம் கடந்த வாரம் வெளியானது. படத்திற்கு நல்ல விமர்சனங்களும், ரசிகர்களின் பாராட்டுக்களும், திரையுலகத்தினர் பலரின் ஆதரவும் கிடைத்து வருகிறது.
தெலுங்குத் திரையுலகத்தின் டாப் ஹீரோவான மகேஷ் பாபு படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரைப் பெரிதும் பாராட்டியுள்ளார். சாய் பல்லவி பற்றி, “எப்போதுமே பரபரப்பூட்டுகிறவர் சாய் பல்லவி. இந்தப் பெண்ணிடம் எலும்புகள் இருக்கிறதா ?. திரையில் இதுவரை இவரைப்போன்று வேறு யாரும் நடனமாடிப் பார்த்ததில்லை. அவருடைய அசைவுகள் கனவு போல உள்ளது,” என்று பாராட்டியுள்ளார்.
அதற்கு சாய் பல்லவி, “வாவ்...நான் சுய நினைவுக்கு வர கொஞ்ச நேரம் ஆகும். உங்களது பெருந்தன்மையான வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி சார். குறிப்பு - எனக்குள் இருக்கும் உங்களின் ரசிகை, இந்த டுவீட்டை மில்லியன் முறை படித்துவிட்டார்,” என மகேஷ்பாபுவின் பாராட்டுக்கு மயங்கி நன்றி தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.
அடுத்து தெலுங்கில் சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பர்வம்', 'ஷியாம் சிங்க ராய்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. தமிழ், மலையாளத்தில் விரைவில் புதிய படங்களில் நடிக்க உள்ளார்.