எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
‛கர்ணன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் முதலில் தகவல்கள் வெளியாகின.
உதயநிதி கே.எஸ்.அதியமான் இயக்கத்திலும், ஆர்டிகிள் 15 இந்திப் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அரசியல் பணிகள் அதிகம் இருப்பதால் தற்காலிகமாக நடிப்புக்கு அவர் குட்பை செல்ல திட்டமிட்டுள்ளார். மாரி செல்வராஜின் படத்துடன் நடிப்பை கைவிட அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. உதயநிதிக்காக பா.ரஞ்சித்தும் துருவ் விக்ரம் படத்தை தள்ளி வைக்க உடன்பட்டிருப்பதாகவும் முதலில் உதயநிதி படம் தொடங்கும் என்றும் செய்தி வெளியானது.
இந்நிலையில் துருவ் விக்ரம், தீவிர கபடி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் கபடி பயிற்சியாளர் ஒருவரிடம் தினமும் கபடி குறித்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறாராம். இந்த பயிற்சி முடிந்தவுடன் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சியின்போது துருவ் விக்ரமுடன் மாரி செல்வராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.