பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் நடிகர் விவேக் திகழ்ந்தார்.
இந்நிலையில் நடந்து முடிந்த சைமா விருது விழாவில் 2020-ம் ஆண்டு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது தாராள பிரபு படத்திற்காக விவேக்கிற்கு வழங்கப்பட்டது. அந்த விருதை யோகிபாபு வாங்கிக்கொண்டார்.
தற்போது நடிகர் விவேக்கின் மகள் விருது வாங்கி வீட்டில் வந்து ஒப்படைத்ததற்காக யோகிபாபுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் "தாராள பிரபு படத்திற்காக - 2020ம் ஆண்டில் நகைச்சுவை வேடத்தில் சிறந்த நடிகருக்கான விருதை என் தந்தைக்கு வழங்கியதற்கு நன்றி சைமா. யோகி பாபு அண்ணா அதைப் பெற்று வீட்டிற்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி. எப்போதும் போல், ரசிகர்களுக்கு நன்றியும் கடமையும்" என்று தெரிவித்துள்ளார்.