15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் மிஷ்கின் | ஹீரோவானார் பிக்பாஸ் விக்ரமன் | தமிழ் படத்தில் வில்லனாக நடிக்கும் சிராக் ஜானி | பிளாஷ்பேக் : சிவாஜி பட ரீமேக்கில் கமல் | பிளாஷ்பேக் : பானுமதிக்கு ஜோடியாக நடித்த தங்கவேலு | விஜய் பிரியா விடை கொடுப்பாரா?, பிரிவு உபசார விழா நடக்குமா? | விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? |

விஜய் நடிப்பில் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதையடுத்தும் விஜய்க்கு ஒரு கதை சொன்னார். அந்த கதை விஜய்க்கு திருப்தி கொடுக்காமல் போனதால் அவர்கள் மீண்டும் இணையவில்லை. அதன்பிறகுதான் விஜய்யின் 65ஆவது படவாய்ப்பு நெல்சனுக்கு சென்றது.
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜூராசிக் பார்க் பட ஸ்டைலில் ஹாலிவுட் பாணியில் குரங்கை மையமாக வைத்து அவர் ஒரு படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரப்பரில் செய்த விலங்குகளை வைத்து, அந்த படத்தை அனிமெட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் எடுத்தது போலவே முருகதாசும் தனது புதிய படத்தை அதேபோன்ற ஹாலிவுட் தொழில்நுட்பத்தில் எடுக்கப்போகிறாராம். இந்த படத்தை டில்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தயாரிப்பதாகவும் சொல்லப்படுகிறது.