தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனு சூட். தமிழில் ‛ஒஸ்தி' உள்ளிட்ட நிறைய படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் வில்லனாக இவர் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா மற்றும் ஊரடங்கு வந்த சமயத்தில் பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் செய்யாத காரியத்தை சோனு சூட் முன்னெடுத்து மக்கள் மனதில் ரியல் ஹீரோவாக திகழ்கிறார்.
கொரோனா சமயத்தில் வெளிமாநிலங்களில் தவித்த பல தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு ரயில், பஸ், விமானம் என அனுப்பி வைத்தவர் தொடர்ந்து இப்போது வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். இதனாலேயே இப்போதும் சோனு சூட்டிடம் உதவிக் கேட்டு பலர் அவரது வீட்டு வாசலை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மும்பையில் சோனு சூட்டிற்கு சொந்தமான 6 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் சோனு சூட்டிற்கு சொந்தமான நிறுவனம் மற்றும் லக்னோவில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் இடையேயான வர்த்தகம் தொடர்பான விஷயத்தில் வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடு நடந்திருப்பதாகவும், அதன் அடிப்படையில் இந்த வருவமான வரிசோதனை நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.