பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ரம்யா பாண்டியன், வாணிபோஜன் நடித்துள்ள, ராமன் ஆண்டாலும் ராவனே ஆண்டாலும் படத்தை சூர்யா தயாரித்துள்ளார். செப். 24ல் அமேசான் தளத்தில் இப்படம் வெளியாகிறது. அரிசில் மூர்த்தி இயக்கியுள்ளார். சாதாரண ஏழை குடும்பத்தில் ஆசையாக வளர்க்கப்படும் இரண்டு மாடுகள் திடீரென காணாமல் போகிறது. அதன் பின் நடக்கும் சம்பவங்களை கிராமத்து வாழ்வியலோடு, நையாண்டி கலந்து கூறியுள்ளனர்.
ரம்யா பாண்டியன் பேட்டி: மிகவும் யதார்த்தமான படம். மேக்கப்பே இல்லாமல் நடித்துள்ளேன். என்னை அழகாக காட்டியுள்ளனர். தமிழ் பேசும் நடிகை என்பதாலேயே எனக்கு இந்த வாய்ப்பை இயக்குனர் வழங்கினார். தமிழ் நடிகை என்பதாலேயே வாய்ப்பு கிடைப்பதில்லையா என்பது தெரியவில்லை. ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலும் மக்கள் மனதில் பதியும்படி நடிக்க வேண்டும். இப்படத்தில் எனக்கு ஜோடியாக புதுமுகம் மிதுன் நடிக்கிறார். இதில் முத்தக்காட்சியும் உண்டு. ஆனால், நான் வளர்த்த மாடுகளுடன் மட்டுமே. இப்படத்திற்காக மாடுகளுடன் பழகவும் வேண்டிஇருந்தது. படப்பிடிப்பு நடந்த இடம் கடினமாக இருந்தாலும், மொத்த படக்குழுவுடன் பயணித்த அனுபவம் இனிமையானது.
இவ்வாறு அவர் கூறினார்.