ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகை ராதிகா சினிமாவுக்கு வந்து 43 ஆண்டுகள் ஆகிறது. அவரது முதல் படமான கிழக்கே போகும் ரெயில் படத்தின் படப்பிடிப்புகள் பழனி மற்றும் தேனி பகுதியை சுற்றி நடந்தது. தற்போது அவர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பழனியை சுற்றி நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்டு ராதிகா நடித்து வருகிறார்.
படப்பிடிப்பின் இடைவெளியில் ராதிகா பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பான படங்களை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர். "பழனி முருகன் கோவிலுக்கு வருவது எப்போதுமே எனக்கு சிறப்பானது. பாசிட்டிவான உணர்வுகளை இங்கு நான் பெறுவேன். இந்த முறை கோவிலுக்கு சென்றபோது எனது பழைய நினைவுகள் மனதில் ஓடியது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.