கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த படம் 'இந்தியன் 2'. 60 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவுற்றபோது, விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா பிரச்சனை, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட சில காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு துவங்கப்படாமலே இருந்து வருகிறது. இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே 'இந்தியன் 2' படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என சென்னை ஐகோர்ட்டில் லைக்கா வழக்கு தொடர்ந்தது. அதேசமயம் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதி மத்தியஸ்தராக இருந்து இருதரப்பையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்துபடி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 'இந்தியன் 2' பட பிரச்சனையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கிட்டத்தட்ட சுமூக உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது கமல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை கமல் முடித்த பிறகு 'இந்தியன் 2' படத்தை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நீடித்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.