கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ஷங்கர், மற்ற மொழிகளில் அதிகமாகப் படங்களை இயக்கவில்லை. 'முதல்வன்' படத்தை மட்டும் ஹிந்தியில் 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்தார். ஆனால், அந்தப் படம் ஓடவில்லை. அதன்பிறகு அவர் தமிழ்ப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் தெலுங்கு, கன்னடப் பட இயக்குனர்கள் கூட பிரம்மாண்டப் படங்களை இயக்கி பான்-இந்தியா இயக்குனர்கள் எனப் பெயரெடுத்துவிட்டனர். எனவே, ஷங்கரும் பான்-இந்தியா இயக்குனர் எனப் பெயர் வாங்க தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் படத்தை ஆரம்பிக்க உள்ளார்.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை செப்டம்பர் 8ம் தேதி முதல் ஆரம்பிக்க இருந்தார்கள். அது தற்போது செப்டம்பர் கடைசிக்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் சில விடுபட்ட காட்சிகளை எடுப்பதற்காக ராம் சரணிடம் 20 நாட்கள் வேண்டுமென ராஜமவுலி கேட்டுள்ளாராம். மேலும், 'ஆச்சார்யா' படத்திலும் ராம் சரண் நடிக்க வேண்டியுள்ளதாம். அந்த படப்பிடிப்புகளை முடித்த பிறகு தனது படத்தை ஆரம்பிக்கலாம் என ஷங்கர் சொல்லிவிட்டதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போதுதான் படப்பிடிப்பு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களையும் வெளியிட உள்ளார்களாம்.