ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி | 'மிஸ்டர்.பாரத்' படப்பிடிப்பு நிறைவு : லோகேஷ் கனகராஜ் நேரில் வாழ்த்து | நிவின் பாலி மீது பணமோசடி வழக்கு | ஒரு வருடத்திற்கு முன்பே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்: கிறிஸ்டோபர் நோலன் புதிய சாதனை | பிளாஷ்பேக்: பாலிவுட்டில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன் | பிளாஷ்பேக் : நாட்டியத்தால் சினிமாவை இழந்த பி.கே.சரஸ்வதி | தலைவன் தலைவி Vs மாரீசன் - அடுத்த வாரப் போட்டி…! |
எண்பதுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல், சினிமா என நடிகையாக மாறியவர் நடிகை சித்ரா. நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என ரசிகர்களால் அறியப்பட்ட இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரதிர்ச்சி கொடுத்த நிலையில், பலரும் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் படங்களில் நடித்து எண்பதுகளில் இன்னொரு முன்னணி நடிகையாக வலம் வந்த ரஞ்சனி என்பவர் சித்ராவின் மறைவிற்கு உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை எனது இன்னொரு அருமையான தோழியையும் இழந்து நிற்கிறேன். கடைசிவரை அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன். உன்னுடைய குறுங் செய்திகளும் உன்னுடைய வாய்ஸும் எப்போதும் என்னுடன் இருக்கும், என் இதயத்தில் எப்போதும் உனக்கு ஒரு இடம் உண்டு என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் ராஜ வாழ்க்கை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.