நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
எண்பதுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சீரியல், சினிமா என நடிகையாக மாறியவர் நடிகை சித்ரா. நல்லெண்ணெய் விளம்பரம் ஒன்றில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என ரசிகர்களால் அறியப்பட்ட இவர், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகிற்கு பேரதிர்ச்சி கொடுத்த நிலையில், பலரும் தங்களது வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள் படங்களில் நடித்து எண்பதுகளில் இன்னொரு முன்னணி நடிகையாக வலம் வந்த ரஞ்சனி என்பவர் சித்ராவின் மறைவிற்கு உருக்கமான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், பேசுவதற்கு வார்த்தைகள் இல்லை எனது இன்னொரு அருமையான தோழியையும் இழந்து நிற்கிறேன். கடைசிவரை அவருடன் தொடர்பில் இருந்து வந்தேன். உன்னுடைய குறுங் செய்திகளும் உன்னுடைய வாய்ஸும் எப்போதும் என்னுடன் இருக்கும், என் இதயத்தில் எப்போதும் உனக்கு ஒரு இடம் உண்டு என கூறியுள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் ராஜ வாழ்க்கை என்கிற படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.