இட்லி கடை படத்தின் டிரைலர் வெளியீட்டு தேதி இதோ | 125 கோடியில் உருவாகும் சம்பரலா ஏடிக்கட்டு | கல்கி 2ம் பாகத்தில் தீபிகா இல்லை: தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு | தங்கை என அழைத்து என் இதயத்தை நொறுக்கினார் : அஜித் மீதான கிரஷ் குறித்து நடிகை மகேஸ்வரி | பிளாஷ்பேக்: ரஜினி பட கிளைமாக்சை மாற்றிய ஏவிஎம் சரவணன் | பிளாஷ்பேக்: பண்டரிபாயை தெரியும், மைனாவதியை தெரியுமா? | சவுந்தர்யாவுடன் சேர்ந்து நானும் போயிருக்க வேண்டியது : மீனா பகிர்ந்த புதிய தகவல் | நான் சிறுவனாக இருந்தபோது எங்களுக்கு முதல்வராக இருந்தவர் மோடி : உன்னி முகுந்தன் பெருமிதம் | மோகன்லாலுக்கே தெரியாமல் அவர்மீது 12 வருட கோபம் : இயக்குனர் சத்யன் அந்திக்காடு புது தகவல் | நடிகர் சித்திக்கிற்கு அரபு நாடுகளுக்கு செல்ல நிபந்தனையுடன் அனுமதி வழங்கிய நீதிமன்றம் |
ஒவ்வொரு காலகட்டத்திலும் அழுவாச்சி கேரக்டர்களுக்கென்றே தனி நடிகைகள் இருப்பார்கள். அதாவது சோகமான, துன்பமான காட்சிகளில் நடிப்பதில் சிறப்பு பெற்றவர்கள். பிற்காலத்தில் சவுகார் ஜானகி, சரிதா போன்றவர்கள் அப்படி பார்க்கப்பட்டார்கள். இவர்களுக்கு முந்தையவர் ஸ்ரீரஞ்சனி.
தெலுங்கு படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீரஞ்சனியை 'பராசக்தி' படத்தில் சிவாஜியின் தங்கை கல்யாணியாக நடிக்க அழைத்து வந்தனர் இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு. தமிழ் சுத்தமாக தெரியாத ஸ்ரீரஞ்சனி முதலில் நடிக்க மறுத்தார். ஆனால் கதைப்படி கல்யாணி கேரக்டர் எப்போதும் துன்பத்தில் தவிக்கும் கேரக்டர் என்பதால் ஸ்ரீரஞ்சனியை விட்டால் வேறு யாரும் அப்போது பொருத்தமாக இல்லை என்று அவருக்கு தமிழ் வசனங்களை தெலுங்கில் எழுதிக் கொடுத்து நடிக்க வைத்தார்கள்.
'பராசக்தி' படம் வெற்றி பெற தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்தார். அதன் பிறகு ராஜி என் கண்மணி, மூன்றெழுத்து, ரத்தகண்ணீர், இல்லறஜோதி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பராசக்தி படத்தில் சிவாஜியின் தங்கையாக நடித்தவர் 'இல்லற ஜோதி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 'குமாரி' என்ற படத்தில் எம்.ஜி.ஆர் ஜோடியாக நடித்தார்.
தமிழிலும் தெலுங்கிலுமாக 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எல்லா படங்களிலும் சோகமாக நடித்ததால் இவரை 'கண்ணீர் திலகம்' என்று ரசிகர்கள் செல்லமாக அழைத்தார்கள். தமிழ், தெலுங்கில் பல ஆண்டுகளாக குணசித்ர வேடங்களில் நடித்தார்.