சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : ரம்யா சுப்பிரமணியன் எச்சரிக்கை | விமர்சனங்களைத் தடுக்க முடியுமா : நானி சொல்லும் ஆலோசனை | பாதாள பைரவி : மீட்டு பாதுகாத்த இந்திய தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் | ரெய்டு 2வில் இருந்து யோ யோ ஹனி சிங் பாடிய ‛மணி மணி' பாடல் வெளியீடு | ஆயிரம் கோடி வசூல் கனவு…. காத்திருக்கும் தமிழ் சினிமா…. | என்டிஆர் - நீல் படப்பிடிப்பு ஆரம்பம்: 'சலார், கேஜிஎப் 3' நடக்குமா? | 'வின்னர், கிரி' - காமெடியை மீண்டும் தருமா 'கேங்கர்ஸ்' கூட்டணி | இளையராஜா பாடலால் 'குட் பேட் அக்லி' ஹிட்டானதா?: கங்கை அமரன் பேச்சுக்கு மகன் பிரேம்ஜி சொன்னது என்ன? |
கடந்த 2019ல் இயக்குநர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான திகில் திரைப்படம் 'காஞ்சனா 3'. இந்த படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்ட்ரா ஜாவி என நான்கு கதாநாயகிகள் நடித்திருந்தனர். இதில் ரோசி எனும் கதாபாத்திரத்தில் பிளாஷ்பேக் காட்சிகளில் நடித்திருந்தவர் அலெக்ஸாண்ட்ரா.
ரஷ்ய நாட்டு மாடல் நடிகையான இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக புகார் அளித்திருந்தார். இதையடுத்து அந்த புகைப்பட கலைஞரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன்பிறகு கோவாவிற்கு சென்ற அவர், அங்கு ஒரு வீட்டை வாடகை எடுத்து வசித்து வந்தார். தனது காதலருடன் வசித்து வந்த அவர், நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலைக் கொண்டுள்ளார். அலெக்ஸாண்ட்ரா தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.