என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் படம் ‛‛காத்துவாக்குல ரெண்டு காதல்''. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. இதற்காக விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் புதுச்சேரியில் முகாமிட்டுள்ளனர். இதனிடையே நேற்று (ஆக., 19) புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை விஜய் சேதுபதி சந்தித்து பேசினார். இதற்கான காரணம் வெளியாகி உள்ளது. அதாவது புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க சொல்லி முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளார் விஜய் சேதுபதி. முதல்வரும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.