என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மோஸ்ட் வான்டட் வில்லன் நடிகராக நடித்து வருபவர் ஜெகபதிபாபு. அந்த வகையில் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் வில்லனாக வேடத்தில் நடித்து வருகிறார் ஜெகபதிபாபு. லிங்கா படத்தை தொடர்ந்து ரஜினியுடன் மீண்டும் இணைந்து நடிக்கும் ஜெகபதிபாபு, இன்னொரு பக்கம் விசுவாசம் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் மீண்டும் இந்தப்படத்தில் நடிக்கிறார்.
தற்போது சாலையோர கடை ஒன்றில் கசங்கிய உடையுடன் ஜெகபதிபாபு சிற்றுண்டி சாப்பிடுவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது லக்னோவில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பின்போது அதில் கலந்து கொண்ட ஜெகபதிபாபு அங்கே உள்ள சாலையோர கடையில் ஸ்னாக்ஸ் சாப்பிட்டார் என்றும் அப்போது எடுத்த படம் என்றும் ஒரு தகவல் பரவியது.
அவர் அப்படி சாலையோர கடையில் சாப்பிட்டது உண்மைதான்.. ஆனால் அது அண்ணாத்த படப்பிடிப்பு சமயத்தில் அல்ல. தற்போது அவர் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பில் தான் என தெலுங்கு திரையுலகில் இன்னொரு தகவல் பரவி வருகிறது.