கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல் | ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் |
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' அனுமதியின்றி நடந்ததால், இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் 'ஷூட்டிங்கை' நிறுத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் 'டான்' திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வருவாய்த்துறையினர், 19,400 ரூபாய் அபராதம் விதித்து விசாரிக்கின்றனர்.
ஆனைமலை எஸ்.ஐ., சின்ன காமணன் கூறுகையில், ''இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது குழுவினர், 30 பேர் மீது, கொரோனா பரவும் என்பதை தெரிந்தும் கூட்டமாக கூடியது, அனுமதியின்றி கூட்டத்தை சேர்த்தியது, ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது உள்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.