ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' அனுமதியின்றி நடந்ததால், இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் 'ஷூட்டிங்' நடந்தது. இதைக்காண, நுாற்றுக்கணக்கான மக்கள் சமூக விலகலின்றி திரண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டி.எஸ்.பி., சீனிவாசன் மற்றும் ஆனைமலை தாசில்தார் விஜயகுமார் 'ஷூட்டிங்கை' நிறுத்தினர். அவர்கள் விசாரணை மேற்கொண்டதில், பல அரசு துறைகளிடம் அனுமதி பெறாமல் 'ஷூட்டிங்' நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆனைமலை போலீசார் 'டான்' திரைப்படத்தின் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி உள்பட, 30 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வருவாய்த்துறையினர், 19,400 ரூபாய் அபராதம் விதித்து விசாரிக்கின்றனர்.
ஆனைமலை எஸ்.ஐ., சின்ன காமணன் கூறுகையில், ''இயக்குனர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது குழுவினர், 30 பேர் மீது, கொரோனா பரவும் என்பதை தெரிந்தும் கூட்டமாக கூடியது, அனுமதியின்றி கூட்டத்தை சேர்த்தியது, ஊரடங்கு காலத்தில் தொற்று பரவும் வகையில் செயல்பட்டது உள்பட, மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் வழக்கில் சேர்க்கப்படவில்லை. சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,'' என்றார்.